பொய்கள்

'எப்படி இருக்கீங்க??' நமக்கு தெரிந்தவர்கள்
அவர்கள் கண்ணில் நாம் தெரிந்தவுடன் கேட்கும் கேள்வி..
"நல்லா இருக்கேன்!!!!" நாமும் வாடிக்கை பதில் சொல்வோம்!
அவர்கள் உள்ளூர கேட்காவிடினும் நாம் உண்மையாய் சொல்லாவிடினும் இந்த பொய்கள் அழகு!!!!

தூரத்து சொந்தத்திடம் துக்கம் விசாரிக்க செல்வோம்
சாப்பிட்டு போங்க என சம்பிரதாயமாய் சொல்வர் ..
"இப்போ தான் சாப்பிட்டோம்" என கொலை பசியிலும்
கொடுர பொய் சொல்வோம் ...

தொலை பேசியில் எதிர் முனையில் எதிரியே பேசினாலும்
"ஹலோ" என ஆங்கில பொய்யுடன் தான ஆரம்பிப்போம் !!!!!!!!!!!!!!

நம் கற்பனை குதிரை போட்ட சாணிகள் - பொய்கள்
நம் மூளைக்கும் இதயத்துக்கும் நடக்கும் சண்டையில்
பிறக்கும் சங்கட குழந்தைகள் -பொய்கள்
மாயைகள் பார்க்க எப்போதும் மயக்கங்கள் நமக்கு
இல்லாமலா திரை அரங்குகள் நிறையுது!!!!

சில நேரங்களில் உண்மைகள்
நம் முன் அம்மனமாய் நின்று சிரிக்கும்
ஆடை பொய்களே நம் அவமானம் மறைக்கும்...

தீமை பயக்கா பொய்கள் சொல்லலாம்...
நன்மை நடக்க வாய்மையும் கொல்லலாம்!!!!
அகம் மகிழ பொய் சொல்லலாம்
பிறர் நெகிழ பொய் சொல்லலாம்..
பொய் உரைப்போம்
கொஞ்சம் மெய் மறப்போம்!!!!!

கருத்துகள்

இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.