காதல் சிவன் Vs மோதல் சிவன்


Xray வில் தெரியாத போதிலும் எல்லாருக்குள்ளும் ஒரு தேவதையும் ஒரு மிருகமும் இருப்பதாய் ஒரு கூற்று உண்டு. எனக்கும் இதில் பெரிதாய் நம்பிக்கை உண்டு.எனக்குள்ளும் இது நடப்பதுண்டு. சும்மா இருக்கும் குழந்தைகளை கொஞ்சி குசியாக்குவேன்,திடீரென கிள்ளி கடுப்பாக்குவேன்.அதே போல் ,அவ்வப்போது ஹோர்மோன்களில் ஏற்படும் கலவரத்தினால் என்னைச்சுற்றியும் காதல் தேவதைகள் வட்டமிடுவார்கள் ,திடீரென உள்ளே இருக்கும் மிருகம் வந்து 'உர்' என கத்தி அவைகளை விரட்டி விட்டு விடும். இதனாலேயே எத்தனை கூட்டத்திலேயும் நான் 'Single' ஆகவே இருக்கிறேன்.கீழே என் தேவதை எண்ணங்களை 'காதல் சிவன்' என்றும் , அதை பகடி செய்து விரட்டி அடிக்கும் மிருக புத்தியை 'மோதல் சிவன்' எனவும் தொகுத்து இருக்கிறேன்(அல்லது அறுத்திருக்கிறேன்). படித்துத் துன்புறுவீர்!!!!!!!!!!!!!!


i) காதல் சிவன்: 'ஒரு முறை சொன்னதை மறுமுறையும் சொன்னால்
கவிதையாம்
ஒரு முறை பார்த்தவுடன் உன்னை மீண்டுமொருமுறை பார்க்க தோன்றுதே -
நீயும் கவிதை தானோ!!!!!!

மோதல் சிவன்: அதெல்லாம் ஒன்னும் இல்ல. மொத வாட்டி நீ சரியா பாத்திருக்க மாட்டே!!!




ii) காதல் சிவன்: ' உலகத்தில் சிறந்த இசை கருவி எது ?
சிலர் வயலின் என்றனர்..
சிலர் பியானோ என்றனர்
சிலர் கிட்டார் என்றனர்.
நான் உன் கொலுசு என்கிறேன்!!!

மோதல் சிவன் : நான் நீ லூசு என்கிறேன் !!!!!




iii) காதல் சிவன் : குத்து பாடல்களில் கும்மாளம் போட்டவன்
இப்போதெல்லாம் மெல்லிசையை மெல்லுகிறேன்!!!

மோதல் சிவன்: கடைசி சாவுமேளம் தான்டோய்!!!!




iv) காதல் சிவன்: உன்னை படைத்தது தான் தானென பெருமையாய்
பிரம்மன் தன் 'Resume' இல் போட்டுக்கொண்டானாமே!!!!

மோதல் சிவன்: அப்ப உன்ன படைச்சதுக்கு தலைல போட்டுக்கிட்டரா??




v) காதல் சிவன்: கடற்கரை
கடைத்தெரு
கோயில் -எங்காவுது ஒரு இடத்தில் உன்னை
மீண்டும் இயல்பாய் சந்திப்பேனா??

மோதல் சிவன்: ஏன்.உன்கிட்ட கடன் வாங்கிருக்காளா ??




vi) காதல் சிவன்: தேவதைகளுக்கு என்ன தேர்வு விடுமுறையா
தெருக்களில் தென்படுகிறார்கள் !!!!

மோதல் சிவன் :
அப்போ தெரு நாய் மாதிரியே சுத்திட்டு இருக்கே??




vii) காதல் சிவன்: நீ ஒரு முறை கடலில் காரி உமிழேன்-
கடல் நீர் குடி நீராக வாய்ப்பிருக்கிறது.

மோதல் சிவன் : ஏன் அப்டியே உன் மூஞ்சில துப்ப சொல்லேன்..





viii) காதல் சிவன்: நீ அழுதிருக்க வேண்டாம்
என்னை அடித்திருக்கலாம்
அவ்வளவு வலித்திருக்காது!!!!

மோதல் சிவன் : நீயும் கூட இப்டி எழுதி கொல்லாம, எங்கள அடிச்சி கொன்றுக்கலாம்




ix) காதல் சிவன்: இப்போதெல்லாம் நிறைய பேசுகிறேன்
-தனிமையில்
மோதல் சிவன் : நெனச்சேன். confirm பண்ணிட்ட....


ஒரு வேளை இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்து தொலைத்திருந்தால் அடியேனின் வலைத்தளத்துக்கு வந்து சேருங்களேன் நானும் எத்தன நாள் தான் யாருமில்லாத கடையில் டீ ஆத்துவுது!!!






கருத்துகள்

Janakiraman இவ்வாறு கூறியுள்ளார்…
Supper da.....
By
Janakiraman
Gangaram இவ்வாறு கூறியுள்ளார்…
dai thambi... nice one da..
keep going
SYLVIA இவ்வாறு கூறியுள்ளார்…
Hey nice one ..
Vetrivel இவ்வாறு கூறியுள்ளார்…
Vazhthukkal Sivraj....
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
ha ha ha ha.........really nice sivan!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Ithu enga poi mudiyumnu theriyala ..!! :)