நட்டுவிற்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. பெரியவர் கொடுத்த ‘Code’ அவனுடைய ‘Pen Drive’ இல் இருந்தது. மீண்டும் ஒருமுறை அதை ‘Run’ பண்ணி பார்த்துக்கொண்டான். எல்லாமே சரியாய் இருப்பதுபோல் பட்டது. அவனே ‘Develop’ செய்தது போல் கையை மடக்கி ‘Yes’ என சொல்லிக்கொண்டான். ‘அவருக்கு எப்படி அவனுடைய ‘Project’ விஷயங்கள் தெரிந்தன?? எப்படி இவ்வளவு சீக்கிரம் தவறுகளை சரி செய்ய முடிந்தது??’ போன்ற நியாயமான கேள்விகள் நட்டுவிடம் தோன்றவில்லை. நட்டு அதே சம்பளத்தையே மூன்று வருடமாய் வாங்கிக் கொண்டிருப்பதிற்கு இதுவும் கூட காரணமாய் இருக்கலாம்.
குமாரிடம் சொல்லவேண்டாம் என முடிவு செய்து,அடுத்த நாள் மதிய வேளையில் ‘Project Manager’ ஷியாமிடம் சென்றான்.
‘வாயா.. நட்ஸ்... என்ன தனியா வந்திருக்கியே...எப்பவுமே உங்கூடவே சுத்துற ‘வேதாளம்’ வரலயா?? ‘
நட்டுவிற்கு எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
‘இல்ல ஷியாம்... வந்து நா அந்த Java Module ஐ சரி பண்ணிட்டேன்..அத உங்க கிட்ட சொல்லலாம்னு.......’
‘ A.C ல ரொம்ப சத்தம் வருதில்ல....இப்போ கூட பாரு நீ எதோ சொல்ற..என்காதுல ‘Java Module’ ஐ சரி பண்ணிட்டேன்னு விழுகுது....’
நட்டு கொஞ்சம் கடுப்பானான்.
‘அலோ ஷியாம்... நான் அதை சரி பண்ணிட்டேன்.... வேணும்னா செக் பண்ணி பாருங்க..’
ஷியாமும் கொஞ்சம் சீரியஸ் ஆனார். ‘நட்டு Calm down. relax. ஒரு தடவ நீ எழுதின Code ஐ நாம Server ல போட்டப்போ , ‘குப்பை கூளங்களை உள்ளே போடாதீர்’ னு Message வந்துச்சே அது ஞாபகம் இருக்கா?’ என கேட்டு மெலிதாய் சிரித்தார்.
அது ஆயிரந்தா உண்மையாய் இருந்தாலும் நட்டுவிற்கு கோபம் வரத்தான் செய்தது.அந்த இடத்திலிருந்து கிளம்ப எத்தனித்தான். ஷியாம் அவன் தோளை பிடித்தார்.
‘இருய்யா கோவிக்காதே... சரி உன்னோட ‘Code’ ஐ ஓட்டு.... பாப்போம்.’
என நக்கலாய் சொல்லி கண்ணடித்தார்.
நட்டு தன்னுடைய ‘Code’ ஐ ‘Execute’ செய்தான். எல்லாமே சரியாய் இருந்தது. Result அசுரத்தனமாய் படு வேகமாய் வந்தது. ஷியாம் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தார்.கண்ணாடியை வேறு கழற்றினார். ஆச்சர்யத்தை வெளிப்படுத்த தமிழகத்தில் பின்பற்றப்படும் பாரம்பர்ய முறை அதுதானே!!!
‘ ஹே... நட்ராஜ்... என்னய்யா இது....எப்டி பண்ண...’ என கேட்டுக்கொண்டே நட்டுவை கட்டிப்பிடித்தார்.விஷயம் அரைமணிநேரத்தில் அலுவலகம் முழுவதும் பரவியது. எல்லோரும் சொல்லிவைத்தார் போல் ‘நம்ம நட்டு வா ??’ என கேட்டுகொண்டார்கள்.
அதுவரை அவனிடம் பேசியே இருக்காத சுனிதா வந்தாள். ‘நட்ஸ்...கிரேட்..Office முழுக்க உன் பேச்சு தான்...ஆமா எதை Use பண்ணின...Servletடா... Strutsஸா?? என்றாள்
‘Keyboard’ என்றான்.
‘You Naughty!!!..’ என சொல்லி அவன் தலையை குலைத்து விட்டு சென்றாள்.
நட்டுவிற்கு எல்லாம் கனவு போல் தெரிந்தது. எல்லாம் சரியாய் நடந்தால் குலதெய்வம் கோவிலில் மொட்டயடிப்பதாய் வேண்டிக்கொண்டான். விஷயம் கேள்விப்பட்டு குமார் கூட வந்தான்.
‘ மச்சி..நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்த?? எதுவும் ஆவி கீவி உனக்குள்ள இறங்கிருச்சா??’
நட்டு புன்னகைத்தான். அதற்குள்ளாகவே நட்டுவை ஷியாம் கூப்பிட்டனுப்ப... அவன் Meeting Hall போனான்.
‘நட்ஸ்..Congrats.. எல்லாரும் உங்க Codeஐ பாத்து இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க...நம்ம mangement இப்பவே உங்களுக்கு Compliment கொடுக்கணும்னு முடிவு பண்ணி...’ என சொல்லிக்கொண்டே டேபிளில் இருந்த கவரை எடுத்தார்.
நட்டுவின் காதில் PULSAR சத்தம் கேட்டது.
‘ஒரு நிமிஷம்..’ என ஒரு கரகரப்பான குரல் கேட்டது.
வெங்கி நின்று கொண்டிருந்தான்.அந்த டீமின் ஆஸ்தான ‘டெஸ்டர்’.
‘நா அந்த Code ஐ டெஸ்ட் பண்ணனும்.’ என்றான்.
‘அதுவும் சரி தான்..வெங்கி நீயும் ஒரு தடவ பாத்திரு...ஆனா எல்லாம் பக்கவா தான் இருக்கு...’ என சொன்னார் ஷியாம்.
அந்த Code ஐ ஆராய்ந்தான் வெங்கி. நட்டுவின் அடி வயிற்றில் IPL நடந்துகொண்டிருந்தது.
‘இதுல ஒரு தப்பு இருக்கு ‘ என உரக்க சொன்னான் வெங்கி. நட்டுவிற்கு வியர்க்க தொடங்கியது.
‘ இந்த Window வை close பண்ணினா உடனே க்ளோஸ் ஆகுது... க்ளோஸ் பண்ணவா வேணாமானு ஒரு Message box வரணுமே’ என்றான்
நட்டு வெறுப்பாகி ,’ஏங்க.. விட்டா காபி வேணுமா.. டீ வேணுமான்னு கேக்க சொல்வீங்க போல... எவ்ளோ BUG இருக்கோ அவ்வளவு குறைச்சிட்டு மிச்ச காச கொடுங்க பாஸ்...’ என்றான்
‘This is not the place to crack stupid jokes...’ என கோபமாய் சொன்னான் வெங்கி. அந்த இடமே கலேபரமானது.
‘அந்த ‘Code’ ஐ அவர்கிட்ட கொடுத்தவனே நான் தான் ‘ என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தராஜன். எல்லோரும் எழுந்தார்கள்.அவர் தான் அந்த Corporate அலுவலகத்தின் CEO. நட்டுவிற்கு Code கொடுத்தவரும் இவரே. கதையில் இப்படி ஒரு ‘Twist’ஐ நட்டுவும் எதிர்பார்க்கவில்லை.
கொஞ்ச நேரம் அந்த அறையை அமைதி ‘Occupy’ செய்தது.
‘CEO வே கொடுத்தாலும் Codeஇல் இருக்கும் குற்றம் குற்றமே!!!’ என்றான் வெங்கி.
‘ அதெல்லாம் இருக்கட்டும் வெங்கி... நீங்க இன்ஜினியரிங் முடிச்சே ரெண்டு வருஷந்தான் ஆகுது...ஆனா நாலு வருஷம் ‘Experience’ னு காமிச்சு நம்ம ஆபிஸ்ல வேலைக்கு சேந்திருகீங்க...அந்த ‘குற்றத்தை’ நேத்து தான் கண்டுபிடிச்சோம். நாளைல இருந்து ஆபிஸ் பக்கம் வந்தீங்கனா உங்க காதை கடிச்சு துப்பிருவேன்...’ என சுந்தராஜன் சொன்னார்.
வெங்கி அதிர்ச்சியில் உறைந்தான்.ஷியாம் தன பங்கிற்கு எதாவுது பேச வேண்டுமென்று எண்ணி ஆரம்பித்தார்.
‘ கிரேட் சார் நீங்க.... யாராலையுமே சரி செய்ய முடியாத Codeஐ நீங்க எப்டி சரி பண்ணீங்க சார் ‘
சுந்தராஜன் குமுற தொடங்கினார்.
‘ Mr.Shyam எதாவுது அசிங்கமா சொல்லிறபோறேன். அந்த Code மேலே ‘முருகன் துணை’ னு எவனோ அடிச்சிருக்கான்... அத எடுத்து விட்டுட்டு ‘Run’ பண்ணினா சரியா வொர்க் ஆச்சு... இது தெரியாம இங்க இவ்வளவு நாளா எண்ணத்தையா ‘PLUCK’ பண்ணிட்டு இருந்தீங்க.... இந்த லட்சணத்துல ‘Appraisal’ கம்மினு பகுமானம் வேற...தூ...’
பேசிவிட்டு சுந்தராஜன் மும்பை ஆபிஸ்க்கு சென்று விட்டார்.
அடுத்த நாள் காலையில் ஷ்யாம் டீம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தார். ‘Guys we have sucessfully crossed our hurdles in our last project. we will be facing new challenges in the upcoming project...’
அந்த அலுவலகம் அடுத்த திருவிளையாடலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது!!!!
************************
கருத்துகள்
அப்பறம் அந்த முருகன் துணை. செம்ம காமெடி!
மொத்தத்துல சூப்பர்.
வாழ்த்துக்கள் சிவராஜ்!
உன் அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறேன்
மிக்க நன்றி ஜகன்னாதன்!!!
our frequency should be matching...
:-)
(http://singamulla.blogspot.com/)
all the best for your future success stories.
if possible enable comments on your latest posts too..
priya