
“Music and rhythm find their way into the secret places of the soul”
- பிளாடோ

- மௌன ராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி 'ஆ....' வென மெல்லிய குரலில் ஆரம்பிக்கையிலேயே உங்கள் தொலைக்காட்சியின் அல்லது வானொலியின் ஒலியை உயர்த்த முயற்சிக்கிறீர்களா??
- 'சங்கீத மேகம்' பாடல் முதல் பட பாடல்களில் மோகன் தானே பாடியது போல் தலையை ஆட்டிக்கொண்டு பாடுகையில் நீங்களும் தலையாட்டி ரசிக்கிறீர்களா??
- 'ஜனனி ஜனனி' என இளைய ராஜா தன் வெண்கலகுரலை காற்றில் பரப்புகையில் நீங்கள் மெய்ச்சிலுர்க்குறீர்களா??
போட்டிக்கு யாருமில்லாததால் ஏன் இளையராஜா கூட ' ராஜா..எப்போதும் நான்இங்கு ராஜா' , 'ராகங்கள் தாளங்கள் கூட ராஜா உன் பேர் சொல்லும்' (வளையோசை பாடல்) என பாடல்களிலேயே 'பஞ்ச்' வைத்தார். அந்தகாலங்களில் ராஜா இசை சாம்ராஜ்யம் நடத்திய படங்களில் பாடல்களின் நடுவேராஜாவின் புகைப்படத்தை காண்பித்து பெருமைப்படுத்துவார்களாம். பாடல்களுடன் ராஜா முடித்துக்கொள்வதில்லை, பின்னணி இசையிலும் படத்தைதாங்கிப்பிடிப்பார். நாயகன் படத்தின் உச்சக்காட்சியில் அந்த சிறு குழந்தைகமலிடம் ,'நீங்க நல்லவரா?? கெட்டவரா?? என கேட்கையில் ராஜாவின் பின்னணிஇசையால் கமலுக்கு முன்பே நமக்கு அழுகை முட்டிக்கோண்டு வரும். பெரும்பாலான நேரங்களில் கருவிகளை விட நம் உணர்வுகளையே மீட்டினார்
ராஜா.

ராஜா.


உணர்ச்சிகளை முகத்தில் காட்டிக்கொண்டே நடனமாடுவது என இருவரும்படத்தில் நடித்ததை விட இந்த பாடலில் நடித்தது அதிகம் என நினைக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத டூயட்களில் இதுவும் ஒன்றாகும். நறுமுகையே...(இருவர்), உயிரே...(பாம்பே),என் மேல் விழுந்த மழைத்துளியே..(மே மாதம்), பூங்காற்றிலே...(உயிரே), பச்சைக்கிளிகள் (இந்தியன்) போன்ற பாடல்கள் மூலம் இசைப்புயல் நமக்கு வசந்தத்தையும் வீசுவதுண்டு.
இது தான் எனக்கு எப்போவோ தெரியுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள். இனிமே தான் ஆட்டமே ஆரம்பமாகிறது. மேலே நினைவுகூறப்பட்ட இசை ஜாம்பவான்கள் கூட ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் எந்த பாடல் மக்கள் மத்தியில் வெற்றிபெறும் என்பதே!!! இவர்களின் எத்தனையோ சிறப்பான பாடல்களுக்கு பாராட்டுக்கிடைக்காமல் போயிருக்கிறது. எந்த இசை நம்மை மயக்கும் என்பது நாமே அறியாததே....கீழே நான் கொடுத்துள்ள சில பாடல்கள் கிட்டத்தட்ட இந்த ரகம் தான். இவை படம் வந்த போதே மாபெரும் வெற்றி பெரும் என நம்பியிருந்தேன். ஆனால் இவை சுவடே தெரியாமல் காணாமல் போனது கொடுமை தான்.
i) உயிரிலே..எனது உயிரிலே(படம்:வேட்டையாடு..விளையாடு ...) : இந்த பாடல் இந்த படத்தில் இருக்கிறதா என்றே பலருக்கு தெரியாது. மிக மெதுவான பாடல். மொட்டை மாடியில் நட்சத்திரத்தை ரசிப்போருக்கு இந்தபாட்டு பார்சல். ஒளியோடு ரசித்தால் கண்களுக்கும் ரம்யம் தருவார் ரவி வர்மன். ஸ்ரீநிவாஸ், மகாலக்ஷ்மி ஐயர் பாடியது.
'
இது ஒரு தனி மனித விருப்பு/வெறுப்பு சார்ந்த கட்டுரையாக தெரிந்தாலும், இதன் உள்நோக்கம் இசை மீதான நம் ஆர்வத்தை தூண்டுவதே.நல்ல இசையை ரசிப்பது ஒரு குழந்தையை கொஞ்சுவதற்கு சமமானதே. நம் உணர்வுகளை முடிவு செய்யும் மாபெரும் சக்தி இசைக்கு உண்டு.
பொதுவாய் தேவா காப்பி அடிக்கிறார் என்று ஒரு கருத்து உண்டு நாம் அவரின் பாடல் வரிகளையே காப்பி அடித்து இந்த கட்டுரையை முடிப்போம்...
இசையோடு வாழ்ந்தோம்..
இசையோடு வாழ்வோம்...
இசையாவோம்!!!!!!!!!!!!!!!!!!
கருத்துகள்