மூன்றெழுத்து!!!!!!!!!!!!!

செந்தில்னு நம்ம நண்பர் ஒருத்தர் அவரோட அலுவலக தோழரோட வாழ்க்கைல நடந்த/நடந்து கொண்டிருக்கிற சம்பவங்கள அப்டியே ஒரு உண்மைத்தொடரா இங்கிலிபிஸ்ல எழுதிட்டு இருக்காரு. சரி நம்ம அதையே தமிழுல எழுதுனா நல்லா இருக்குமேன்னு ஒரு அற்ப ஆசை... அதாங்க நம்ம 'ஜெயம்' ரவி, விஜய் லாம் பண்ணுவாங்களே ...அதே தான் ' REMAKE' ... உங்களை நெனச்சா தான் பாவமா இருக்கு ,எவ்வளவோ தாங்கிட்டீங்க இத தாங்க மாட்டீங்களா?? ...

Our Sincere thanks to
செந்தில்........(http://simplytoknow.blogspot.com)

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், டம்ளர்கள் அனைத்தும் உண்மையே!!!!!





மூன்றெழுத்து!!!!!!!!!!!!!
************************************
உண்மைத்தொடர் பகுதி-1

ஒரு வெள்ளிக்கிழமை சாயங்காலம் சென்னையே இங்கு தான் இருக்கோ அப்டின்னு சந்தேகப்படும் அளவுக்கு இருந்தது எக்மோர் ரயில் நிலையம். ' பயணிகளின் கனிவான கவனத்திற்கு ' என்ற அறிவிப்பை கேட்கத்தயாராக இல்லாமல் அங்கும் இங்கும் மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். கையில் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்த படி 'பியர்ல் சிட்டி' எக்ஸ்ப்ரஸின் S7 கோச்சில் ஏறிக்கொண்டான் சதீஷ். அதே நீல நிற இருக்கைகள், கொஞ்சூண்டு சிறுநீர் வாடை, அங்கங்க கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் குறிப்புகள், வீட்டையே ரெண்டு கூடைப்பைக்குள் அடைத்து வரும் பெண்கள், ஓடினாலும் பயன்தராத உதவாக்கரை மின்விசிறிகள் என மாதமிருமுறை ரயில்பயணம் செய்வதில் பார்த்து ஒருமாதிரி பழகிப்போயிருந்தது சதீசுக்கு. தன்னோட இருக்கையில் அமர்ந்து லேசாய் சாய்ந்து கொண்டான். அலுவலகத்தில் இருந்து கெளம்பும்போது மேனேஜர் நகர விடாம கேள்வி கேட்டதெல்லாம் ஞாபகம் வந்தது . ரெண்டு, மூணு கெட்டவார்த்தைகளால் உள்ளுக்குள்ளே திட்டினான். பக்கத்திலிருந்த கண்ணாடி பார்த்து தலை வாரிக்கொண்டான். முகத்தில் ரெண்டு நாள் தாடி ஒட்டியிருந்தது. இன்னொரு 'உப்புமா' பயணத்துக்கு தயாராவதாக நினைத்து நொந்து கொண்டான். ஆனால் காலம் அவனைப்பார்த்து கண்டபடி சிரித்தது . அது அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

அந்த மாலை வேளையிலும் எல்லோருக்கும் வேர்த்து ஊத்திக்கொண்டிருந்தது. 'உச்' கொட்டிக்கொண்டே கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டிருக்கையில் தான் அவளைப்பார்த்தான்.S7 இல் ஏறி நடந்து வந்து அவனது எதிர் இருக்கையின் எண்ணை பார்த்துவிட்டு , 'ம்.. Seat பாத்துட்டேன்' னு யார்கிட்டயோ போன்ல சொல்லிக்கொண்டிருந்தாள்.மீண்டு
மொருமுறை பார்த்துக்கொண்டான் சதீஷ். அவளே தான். அவன் அலுவலகத்தில் புதிதாய் போனமாசம் வேலைக்கு சேர்ந்த புதுமுகத்தில் இவளும் ஒருத்தி. ஆயிரம் பேர் இயங்கும் அந்த IT தளத்தில் தனியாய் தெரியும் வடிவானவள். சுத்த தமிழுல சொல்லனும்னா 'செம்ம figure'. இந்த தொடருக்கு கதாநாயகி ஆகும் எல்லா தகுதியும் உள்ளவள். மஞ்சள் சுடிதார் ,வெள்ளை டாப்ஸ், சிரிக்காத போதுகூட கன்னத்தில் விழும் குழி,ஒரே ஒருவிரலில் மட்டும் வளர்க்கப்பட்ட நகம் அப்டின்னு அவளை பார்த்து ஜொள்ளுவிட ஆயிரம் காரணங்கள் ஆண் இனத்துக்கு உண்டு. கையிலிருந்த ஆனந்த விகடனை யதார்த்தமாய் திருப்புவதுபோல் நடித்துக்கொண்டே அவள் பேர் என்னான்னு யோசித்துக்கொண்டிருந்தான் சதீஷ். ' பேர் என்னமோ சொன்னானே செந்தில் அன்னிக்கு ...' என மனதில் போட்டு குழப்பிகொண்டிருந்தான். அதுக்கெல்லாம் காலபைரவர் வேலைவைக்கவில்லை. அவளே அவனைப்பார்த்து லேசா சிரித்து , 'ஹலோ' என்றாள். ரயில் தன் பயணத்தை ஆரம்பித்தது.


கன்னாபின்னாவென துடித்த இதய ஓட்டத்தை கண்டுகொள்ளாமல் இவனும் அவளைப்பார்த்து 'ஹாய்' சொன்னான்.

அவள் ,' ஐ 'ம் கீர்த்தனா. நீங்க சதீஷ் தானே. பதினொன்னாவுது floor ல இருக்கிற JD Projectla தான் வொர்க் பண்றீங்க' அப்டின்னு புருவத்தை உயர்த்திக்கேட்டாள். அவள் குரல் அந்த அளவு இனிமை இல்லையெனினும் ,எதோ ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

' ஓ... உங்களுக்கு ஜோசியம்லாம் தெரியுமா... பொட்டு கொஞ்சம் பெருசா இருக்கிறப்போவே Doubt ஆனேன்' முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சொன்னான் சதீஷ்.

கீர்த்தனா குறும்பாய் அவனைப்பார்த்து லேசாய் சிரித்தாள் அல்லது இன்னும் அழகானாள். ' என்ன எப்படி தெரியும்னு' கேட்பதற்கு பதில் சதீஷ் போட்ட 'பிட்டு' ஓரளவு 'Work Out' ஆகியது. சந்தடி சாக்கில் அவள் பொட்டை பற்றியும் கமென்ட் சொல்லியாகிவிட்டது. அழகுப்பெண்களிடம் பேசக்கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் ஒலிம்பிக் நொடிகள். கிடைக்கின்ற கனப்பொழுதில் சாதித்தே ஆக வேண்டும், இல்லேயேல் காத்திருக்கும் மைக்கேல் பெல்ப்சோ, ஹுசைன் போல்டோ பதக்கத்தை அள்ளிவிடுவார்கள். இந்த ஞானமெல்லாம் ஏழு கழுதை வயசான நம்ம சதீசுக்கு சொல்லத்தேவையிருக்கவில்லை.

' ஹலோ... உங்க project ல இருக்கிறாளே ரோஷினி....'

' ஆமா'

'அவ என்னோட கஸின்....'

நல்லவேளை 'ஆமா' விற்கு பதிலாக ,'அந்த லூசா'வென கேட்கவிருந்தான். மயிரிழையில் தப்பினான்.

'அவ உங்க எல்லாத்தையும் பத்தி அடிக்கடி சொல்லிட்டிருப்பா... நா Break டைம் ல உங்க floor ல தான் சுத்திட்டு இருப்பேன் ' என்றாள்

' நாங்கூட உங்கள அடிக்கடி பாத்திருக்கேன் ' என தன்னையுமறியாமல் வழிந்தான். அவனுக்குத்தான் அவள் வரும் நேரம் முதற்கொண்டு தெரியுமே...

இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கள் அலுவலகத்தை பற்றி ,அரசியல் ,சினிமா அது இது வென சிக்கியதெல்லாம் பேசினார்கள். இரவு சாப்பிடுகையில், தான் கொண்டுவந்திருந்த இட்லியை கடப்பாரை கொண்டு வந்து தான் பிளக்க வேண்டும்னு கீர்த்தனா சொன்ன மொக்கை ஜோக்குக்கு சதீஷ் பயங்கரமாய் சிரித்தான். அதுவும் சாப்பாடே பொறை ஏறுவது போல் பண்ணியது தேசிய விருதுக்கான நடிப்பு.இவர்கள் பேசுவதெல்லாம் கொஞ்சமாய் கேட்டுக்கொண்டே வந்த சக பயணிகள் மூஞ்சில் நிறைய எரிச்சல் தெரிந்தது. அதுவும் ஒரு பெரியவர் அஜீரண கோளாறு போல் மூஞ்சை வைத்துகொண்டார். ஒரு வழியாய் 'Lets Sleep' என கீர்த்தனா தான் முற்றுப்புள்ளி வைத்தாள். சதீஷ் சமத்தாய் தலையாட்டினான். வேறென்ன செய்ய முடியும் முடிவெடுக்கும் உரிமை தான் ஆண்களுக்கு எந்த காலத்திலயும் கிடைத்ததில்லையே.. இருவரும் கொஞ்ச நேரத்திலே தூங்கிப்போனார்கள்.

மணி காலை 5 ஐ தொட்டது. திருச்சி நிலையத்தில் வண்டி நின்றுகொண்டிருந்தது. சதீஷ் விழித்து உட்கார்ந்து கொண்டான். இரவில் கீர்த்தனா கூட பேசியதெல்லாம் அழகாய் ஞாபகம் வந்தது. மிச்ச தூக்கத்தை கெடுக்க அதுவே போதுமானதாக இருந்தது. அதுவும் அவள் அந்த ஐஸ் கிரீம் குரலில் ' ஹே..சதீஷ்..' என கூப்பிட்டதை நினைத்துப்பார்த்து ரசித்தான். மேல் பெர்த்தை பார்த்தான்.கீர்த்தனா மூஞ்சு வரை பெட்ஷீட் மூடி படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். காதில் head phone ஐ செருகி காதல் பாடல்களை தட்டினான். கீர்த்தனா தரிசனத்திற்காக காத்திருந்தான்.

இன்னும் மதுரையை சென்றடைய முப்பது நிமிடம் தான் இருந்தது. சதீஷ் இன்னும் இருப்பதே நிமிடத்தில் சோழவந்தானில் இறங்கி விடுவான். கீர்த்தனா எழுந்திருப்பது போல் தெரிவதில்லை.அவளை எழுப்பலாமா என யோசித்து நாகரீகம் கருதி அந்த முடிவை கை விட்டான் சதீஷ். திடீரென ஒரு ஹார்ன் சத்தத்தில் எழுந்த கீர்த்தனா கீழே குனிந்து ஜன்னல் பக்கம் பார்த்து விட்டு நாம எங்க இருக்கோம்னு சதீசை பார்த்து கேட்டாள்.



' ஏன் இவ்வளவு நேரம் கோமா ஸ்டேஜ்லயா இருந்த??... வேமா கீழே இறங்கு இன்னும் கால் மணி நேரத்துல மதுரை வந்திரும் ..'

' oh god ... நீயாவுது என்ன எழுப்பிருக்கலாம்ல' னு சொல்லிக்கொண்டே கீழிறங்கினாள். பாத்ரூம் பக்கம் போய் முகத்தை கழுவிவிட்டு உட்காந்தாள்.

' நான் அடுத்த station ல இறங்கிடுவேன் .... ஹே எதுவும் தண்ணி கிண்ணி அடிச்சிட்டு படுத்திட்டியா?.. இப்படி தூங்குற??'

'ஹி ஹி' என சிணுங்கி விட்டு ' ரொம்ப 'Tired' ஆ இருந்துச்சு அதான். எப்பவும் நான் ஒன்பது மணிவரைக்கும் தூங்குவேன் தெரியுமா' என்றாள்.

' பாவம்'

' யாரு'

'யாரோ'

இருவரும் மெல்லமாய் சிரித்தார்கள். வண்டி சோழவந்தான் நிலையத்தை அடைந்தது. 'Bye' சொல்லிவிட்டு பேக்கை எடுத்தான். ' ஹே உன் மொபைல் நம்பர் சொல்லு' என்றாள்.நல்லவேளை எங்க கேக்காமல் போய் விடுவாளோ என பயந்திருந்தான். இருவரும் பரஸ்பரம் நம்பர்களை பரிமாறிக்கொண்டார்கள். பக்கத்து சீட்டு பெரியவர் முகம் இன்னும் அப்படியே இருந்தது. அஜீரணக்கோளாறு முடிந்ததாய் தெரியவில்லை. கீர்த்தனாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு வேகமாக இறங்கிக்கொண்டான்.

ரயில் மதுரையை நோக்கி புறப்பட ஆரம்பித்தது. சதீஷுக்கு மொபைலில் குறுஞ்செய்தி வந்தது. எடுத்து பார்த்தான். ' Hey Satheesh, happy weekend. Enjoy !!' என கீர்த்தனா தான் அனுப்பியிருந்தாள்.போகிற ரயிலில் அவள் தலை தெரிகிறதா என எட்டிப்பார்த்தான். ர.மு , ர.பி என ரயில் பயணத்திற்கு முன்னும் பின்னும் என பிரிக்கும் அளவிற்கு அவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள். இன்னும் போகிற ரயிலை பார்த்துக்கொண்டிருந்தான்.
இப்படியே சில நிமிடம் தொடர்ந்தது அவனது
-- தேடல்

---- மூன்றெழுத்து தொடரும்------------









கருத்துகள்

Aba இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பரா பின்னிட்டிங்க சார். பிரமாதம்.
JC இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் பையன் நம்ம ஊரா தெரியுது ... யாருப்பா அது... Sholavandanla எங்க இருக்கான் ?

BTW நல்ல தொடக்கம் ... அடுத்த எபிசொட் கு waiting ...

Jc
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//சூப்பரா பின்னிட்டிங்க சார். பிரமாதம்//

நன்றி கரிகாலன்
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//டேய் பையன் நம்ம ஊரா தெரியுது ... யாருப்பா அது... Sholavandanla எங்க இருக்கான் ?//
நன்றிப்பா ஜெகன்.... அவரு யாருன்னு நீ ஐஸ் கட்டில கட்டிவச்சி நகத்த பிடுங்கி கேட்டாலும் சொல்லமாட்டேன்....


//BTW நல்ல தொடக்கம் ... அடுத்த எபிசொட் கு waiting ...//
நீ தான் சொல்ற....
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
ஹேய் சிவா...என்ன இப்டிலாம்...
பின்றீங்க........
ஆனா இந்த பயணங்களில் வர்ற உறவுகள் ரொம்ப திரில்லான விஷயம்...
என் வாழ்விலும் சில இப்டி கடந்துருக்கேன்...! :-)

ஆவலோடு அடுத்த பாகம் எதிர் பாக்றேன்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
super translation...

சக பயணிகள் மூஞ்சில் நிறைய எரிச்சல் தெரிந்தது. அதுவும் ஒரு பெரியவர் அஜீரண கோளாறு போல் மூஞ்சை வைத்துகொண்டார்.

I'll keep this in my mind when I happen to see some face in train.. :-)