செந்தில்னு நம்ம நண்பர் ஒருத்தர் அவரோட அலுவலக தோழரோட வாழ்க்கைல நடந்த/நடந்து கொண்டிருக்கிற சம்பவங்கள அப்டியே ஒரு உண்மைத்தொடரா இங்கிலிபிஸ்ல எழுதிட்டு இருக்காரு. சரி நம்ம அதையே தமிழுல எழுதுனா நல்லா இருக்குமேன்னு ஒரு அற்ப ஆசை... அதாங்க நம்ம 'ஜெயம்' ரவி, விஜய் லாம் பண்ணுவாங்களே ...அதே தான் ' REMAKE' ... உங்களை நெனச்சா தான் பாவமா இருக்கு ,எவ்வளவோ தாங்கிட்டீங்க இத தாங்க மாட்டீங்களா?? ...
Our Sincere thanks to
செந்தில்........(http://Our Sincere thanks to
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், டம்ளர்கள் அனைத்தும் உண்மையே!!!!!
அந்த மாலை வேளையிலும் எல்லோருக்கும் வேர்த்து ஊத்திக்கொண்டிருந்தது. 'உச்' கொட்டிக்கொண்டே கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டிருக்கையில் தான் அவளைப்பார்த்தான்.S7 இல் ஏறி நடந்து வந்து அவனது எதிர் இருக்கையின் எண்ணை பார்த்துவிட்டு , 'ம்.. Seat பாத்துட்டேன்' னு யார்கிட்டயோ போன்ல சொல்லிக்கொண்டிருந்தாள்.மீண்டு
கன்னாபின்னாவென துடித்த இதய ஓட்டத்தை கண்டுகொள்ளாமல் இவனும் அவளைப்பார்த்து 'ஹாய்' சொன்னான்.
' ஆமா'
'அவ என்னோட கஸின்....'
நல்லவேளை 'ஆமா' விற்கு பதிலாக ,'அந்த லூசா'வென கேட்கவிருந்தான். மயிரிழையில் தப்பினான்.
' நாங்கூட உங்கள அடிக்கடி பாத்திருக்கேன் ' என தன்னையுமறியாமல் வழிந்தான். அவனுக்குத்தான் அவள் வரும் நேரம் முதற்கொண்டு தெரியுமே...
இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கள் அலுவலகத்தை பற்றி ,அரசியல் ,சினிமா அது இது வென சிக்கியதெல்லாம் பேசினார்கள். இரவு சாப்பிடுகையில், தான் கொண்டுவந்திருந்த இட்லியை கடப்பாரை கொண்டு வந்து தான் பிளக்க வேண்டும்னு கீர்த்தனா சொன்ன மொக்கை ஜோக்குக்கு சதீஷ் பயங்கரமாய் சிரித்தான். அதுவும் சாப்பாடே பொறை ஏறுவது போல் பண்ணியது தேசிய விருதுக்கான நடிப்பு.இவர்கள் பேசுவதெல்லாம் கொஞ்சமாய் கேட்டுக்கொண்டே வந்த சக பயணிகள் மூஞ்சில் நிறைய எரிச்சல் தெரிந்தது. அதுவும் ஒரு பெரியவர் அஜீரண கோளாறு போல் மூஞ்சை வைத்துகொண்டார். ஒரு வழியாய் 'Lets Sleep' என கீர்த்தனா தான் முற்றுப்புள்ளி வைத்தாள். சதீஷ் சமத்தாய் தலையாட்டினான். வேறென்ன செய்ய முடியும் முடிவெடுக்கும் உரிமை தான் ஆண்களுக்கு எந்த காலத்திலயும் கிடைத்ததில்லையே.. இருவரும் கொஞ்ச நேரத்திலே தூங்கிப்போனார்கள்.
மணி காலை 5 ஐ தொட்டது. திருச்சி நிலையத்தில் வண்டி நின்றுகொண்டிருந்தது. சதீஷ் விழித்து உட்கார்ந்து கொண்டான். இரவில் கீர்த்தனா கூட பேசியதெல்லாம் அழகாய் ஞாபகம் வந்தது. மிச்ச தூக்கத்தை கெடுக்க அதுவே போதுமானதாக இருந்தது. அதுவும் அவள் அந்த ஐஸ் கிரீம் குரலில் ' ஹே..சதீஷ்..' என கூப்பிட்டதை நினைத்துப்பார்த்து ரசித்தான். மேல் பெர்த்தை பார்த்தான்.கீர்த்தனா மூஞ்சு வரை பெட்ஷீட் மூடி படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். காதில் head phone ஐ செருகி காதல் பாடல்களை தட்டினான். கீர்த்தனா தரிசனத்திற்காக காத்திருந்தான்.
இன்னும் மதுரையை சென்றடைய முப்பது நிமிடம் தான் இருந்தது. சதீஷ் இன்னும் இருப்பதே நிமிடத்தில் சோழவந்தானில் இறங்கி விடுவான். கீர்த்தனா எழுந்திருப்பது போல் தெரிவதில்லை.அவளை எழுப்பலாமா என யோசித்து நாகரீகம் கருதி அந்த முடிவை கை விட்டான் சதீஷ். திடீரென ஒரு ஹார்ன் சத்தத்தில் எழுந்த கீர்த்தனா கீழே குனிந்து ஜன்னல் பக்கம் பார்த்து விட்டு நாம எங்க இருக்கோம்னு சதீசை பார்த்து கேட்டாள்.
' ஏன் இவ்வளவு நேரம் கோமா ஸ்டேஜ்லயா இருந்த??... வேமா கீழே இறங்கு இன்னும் கால் மணி நேரத்துல மதுரை வந்திரும் ..'
இன்னும் மதுரையை சென்றடைய முப்பது நிமிடம் தான் இருந்தது. சதீஷ் இன்னும் இருப்பதே நிமிடத்தில் சோழவந்தானில் இறங்கி விடுவான். கீர்த்தனா எழுந்திருப்பது போல் தெரிவதில்லை.அவளை எழுப்பலாமா என யோசித்து நாகரீகம் கருதி அந்த முடிவை கை விட்டான் சதீஷ். திடீரென ஒரு ஹார்ன் சத்தத்தில் எழுந்த கீர்த்தனா கீழே குனிந்து ஜன்னல் பக்கம் பார்த்து விட்டு நாம எங்க இருக்கோம்னு சதீசை பார்த்து கேட்டாள்.
' ஏன் இவ்வளவு நேரம் கோமா ஸ்டேஜ்லயா இருந்த??... வேமா கீழே இறங்கு இன்னும் கால் மணி நேரத்துல மதுரை வந்திரும் ..'
' oh god ... நீயாவுது என்ன எழுப்பிருக்கலாம்ல' னு சொல்லிக்கொண்டே கீழிறங்கினாள். பாத்ரூம் பக்கம் போய் முகத்தை கழுவிவிட்டு உட்காந்தாள்.
' நான் அடுத்த station ல இறங்கிடுவேன் .... ஹே எதுவும் தண்ணி கிண்ணி அடிச்சிட்டு படுத்திட்டியா?.. இப்படி தூங்குற??'
'ஹி ஹி' என சிணுங்கி விட்டு ' ரொம்ப 'Tired' ஆ இருந்துச்சு அதான். எப்பவும் நான் ஒன்பது மணிவரைக்கும் தூங்குவேன் தெரியுமா' என்றாள்.
' பாவம்'
' யாரு'
'யாரோ'
' பாவம்'
' யாரு'
'யாரோ'
இருவரும் மெல்லமாய் சிரித்தார்கள். வண்டி சோழவந்தான் நிலையத்தை அடைந்தது. 'Bye' சொல்லிவிட்டு பேக்கை எடுத்தான். ' ஹே உன் மொபைல் நம்பர் சொல்லு' என்றாள்.நல்லவேளை எங்க கேக்காமல் போய் விடுவாளோ என பயந்திருந்தான். இருவரும் பரஸ்பரம் நம்பர்களை பரிமாறிக்கொண்டார்கள். பக்கத்து சீட்டு பெரியவர் முகம் இன்னும் அப்படியே இருந்தது. அஜீரணக்கோளாறு முடிந்ததாய் தெரியவில்லை. கீர்த்தனாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு வேகமாக இறங்கிக்கொண்டான்.
ரயில் மதுரையை நோக்கி புறப்பட ஆரம்பித்தது. சதீஷுக்கு மொபைலில் குறுஞ்செய்தி வந்தது. எடுத்து பார்த்தான். ' Hey Satheesh, happy weekend. Enjoy !!' என கீர்த்தனா தான் அனுப்பியிருந்தாள்.போகிற ரயிலில் அவள் தலை தெரிகிறதா என எட்டிப்பார்த்தான். ர.மு , ர.பி என ரயில் பயணத்திற்கு முன்னும் பின்னும் என பிரிக்கும் அளவிற்கு அவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள். இன்னும் போகிற ரயிலை பார்த்துக்கொண்டிருந்தான்.
இப்படியே சில நிமிடம் தொடர்ந்தது அவனது
-- தேடல்
---- மூன்றெழுத்து தொடரும்------------
இப்படியே சில நிமிடம் தொடர்ந்தது அவனது
கருத்துகள்
BTW நல்ல தொடக்கம் ... அடுத்த எபிசொட் கு waiting ...
Jc
நன்றி கரிகாலன்
நன்றிப்பா ஜெகன்.... அவரு யாருன்னு நீ ஐஸ் கட்டில கட்டிவச்சி நகத்த பிடுங்கி கேட்டாலும் சொல்லமாட்டேன்....
//BTW நல்ல தொடக்கம் ... அடுத்த எபிசொட் கு waiting ...//
நீ தான் சொல்ற....
பின்றீங்க........
ஆனா இந்த பயணங்களில் வர்ற உறவுகள் ரொம்ப திரில்லான விஷயம்...
என் வாழ்விலும் சில இப்டி கடந்துருக்கேன்...! :-)
ஆவலோடு அடுத்த பாகம் எதிர் பாக்றேன்.
சக பயணிகள் மூஞ்சில் நிறைய எரிச்சல் தெரிந்தது. அதுவும் ஒரு பெரியவர் அஜீரண கோளாறு போல் மூஞ்சை வைத்துகொண்டார்.
I'll keep this in my mind when I happen to see some face in train.. :-)