
எது எப்டியோ நானும் புத்தாண்டு தீர்மானம் எடுத்துவிடுவது என முடிவு செய்து, சிந்தனை கிடங்கை தோண்டினேன். என்ன ஆச்சர்யம் நிறைய விசயங்கள் இருக்கின்றன. பின்பு மிகுந்த வீராப்புடன் எழுத தொடங்கினேன்.
1.இனிமேல் மேனேஜர் சொல்லும் மொக்கையான ஜோக்குக்கு தேவைக்கு அதிகமா சிரிக்கக்கூடாது.
2.மதிய வேளைகளில் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை பகிர்ந்து கொண்டு ,'எப்டி இருக்கு' என கேட்கும் தோழிகளிடம் 'கேவலமா இருக்கு' னு உண்மையை சொல்லி விடுதல் வேண்டும்.
3. 'பஜாஜ் எவ்வளவு மைலேஜ் தருது...ஹோண்டா என்ன ரேட் ??' என்று கேட்பதை விட்டுட்டு முதலில் டூ வீலர் லைசென்ஸ் வாங்குதல் வேண்டும்.
4. போடும் ஜீன்ஸ் பேண்டுகளை ஒரு மாதத்திற்கு ஒரு தடவையாவது துவைத்து விட வேண்டும்.
5. 'வித்யாசமா எடுத்திருக்கோம்' ,'அவரே பாத்திட்டு அழுது வடிஞ்சிட்டார்', 'அப்டியே வாழ்ந்திருக்காங்க..' னு வரும் விளம்பரங்களை நம்பி மொக்கை படங்களை பார்க்க தியேட்டர் செல்லுதல் கூடவே கூடாது .
6) 'ஏன்டா தமிழுல 'சீக்கு' ங்றத தான் இங்கிலிஷ்காரன் 'Sick' னு காப்பியடிச்சுடானா டா ??' போன்ற முற்போக்கு சந்தேகங்கள் கேட்க நண்பர்களை இரவு பனிரெண்டு மணிக்கு எழுப்புதல் கூடாது.
7) பெரியவர்கள் உயிரை உருக்கி அறிவுரைகள் சொல்லுகையில் கொட்டாவி விடக்கூடாது.
8) 'நாங்கெல்லாம் காலேஜ் படிக்கிறப்போ..' னு யாராவுது ஆரம்பித்தால், அவர் வாங்கிக்கொடுத்த ஓசி டீயையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து ஓடி விடுதல் வேண்டும்.
9) 'நா இப்போ தலைய சொறிஞ்சிட்டு இருக்கேன்.நீ என்ன பண்ணிட்டு இருக்க??' போன்ற Chat Messageகளை தவிர்க்க வேண்டும்.
10)நண்பர்கள் யாராவுது புகைப்பிடித்தால் ,'உங்கூட எங்கம்மா சேரக்கூடாதுனு சொல்லிருக்காங்க' என சொல்லி அவர் நட்பை முறித்து விட வேண்டும்.
எழுதிய முத்தான பத்து தீர்மானங்களையும் அடுத்த நாள் நம்ம அலுவலக நண்பரிடம் காட்டினேன். வாசித்து பார்த்தார். அவரின் முகம் மாறியது. கண்களிலே நீர் கொட்டியது. 'இருக்காத பின்னே..' என பெருமைபட்டுக்கொண்டே ,'அவ்வளவு நல்லவா இருக்கு' என்றேன். 'சுகாதாரமா இருக்கட்டுமேனு கண்ணாலேயே காரி துப்பினேன்' என்றார். மீண்டும் அந்த நாலு பேர் சிரித்தார்கள்.

கருத்துகள்
ஹி ஹி ஹி...
நான் எதுவுமே சொல்லலைங்ண்ணா...