வாசகர் கேள்வி-பதில்




நம்ம வலைத்தளத்தில் கேள்வி பதில் பகுதிக்கு கேள்வி அனுப்புங்கன்னு சொன்னாலுஞ்சொன்னோம்,தபால் நிலையங்களிளெல்லாம் ஒரே தள்ளு முள்ளு. உலகம்முழுவதும் கேள்விக்கணைகள் ஏவுகணைகள் போல் வந்து இறங்கியிருக்கின்றன. எத்தியோப்பியாவில் இருந்துகூட ஏழு சாக்கில் கேள்விகள் வந்திருக்கின்றன. மூட்டை மூட்டையாய் கடிதங்களை தூக்கிவந்தே அந்த தபால்காரருக்கு 'சிக்ஸ் பேக்' வந்து விட்டது. இந்த மக்களின் அறிவுப்பசிக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது. சிறப்பான கேள்விக்கு வாராவாரம் மெகா பரிசாக ரூபாய் 101 வழங்கப்படும்னு சொன்னதும் கூட காரணமாய் இருக்கலாம். இந்த வார பகுதிக்கு செல்வோம்.

1) கடவுள் இருக்கிறாரா?? இல்லையா ?? (நெடுமுடியான், திருப்பதி)

யோவ் நீ ஸ்டாம்ப் ஓட்டமா அனுப்பின லெட்டருக்கு நான் பதில் சொல்றேனே அப்பவே தெரிய வேணாம்....கடவுள் இருக்கான்யா....


2) தமன்னா அழகா? அனுஷ்கா அழகா ? நீங்களே சொல்லுங்களேன் ...??(அழகப்பன்,காரைக்குடி)

இத மெனக்கெட்டு கேள்வின்னு கேட்ருக்க பாரு நீ தாண்டா செல்லம் அழகு....


3) நான் தங்கள் வலைத்தளத்தை கடந்த முப்பதாண்டுகாளாய் படித்து வருகிறேன்.உங்களை மாதிரி ஒரு Writer தமிழகத்தில் இல்லையென்கிறேன்....சரி தானே?? (திருவள்ளுவர்,மயிலாப்பூர்)

என்ன இப்டி சொல்லிடீங்க..நம்ம R2 ஸ்டேஷன்ல ஒரு Writer இருக்காரு...சும்மா குண்டு குண்டா சூப்பரா எழுதுவாரு...உங்களுக்கு தெரியாதா...





4)கலைஞரும் கேள்விபதில் எழுதுறாரு..நீங்களும் கேள்வி பதில் எழுதுறீங்க...உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்யாசம்??? (ஜெயா,ஸ்ரீரங்கம்)
60வயது ...மூன்று மனைவிகள்...


5)இவ்வளவு வளங்கள் இருந்தும் இந்தியா முன்னேராததற்கு காரணம் 'கண் திருஷ்டி' தானே ??? (கேது,திருநள்ளாறு)

கரெக்டா கண்டுபுடிச்சீங்க...ஒரு ஹெலிகாப்டர்ல மிளகா அம்பது கிலோ ,எலுமிச்சை இருபது கிலோ...மஞ்சள் முப்பது கிலோனு எடுத்துகிட்டு போய் இந்தியாவையே சுத்திவந்து வங்கக்கடல்ல போட்டு காரித்துப்பீருங்க ..திருஷ்டி கழிஞ்சிரும்...


6)அது ஏன் நூறு ரூபாய் நோட்ல காந்தித்தாத்தா படம் போட்டிருக்கு??? (அருமைநாயகம்,ஆத்தூர்)

அப்புறம்..உங்க அப்புத்தா படமா போடுவாங்க....




7)கௌதம் மேனனின் அடுத்த படம் எப்போ வரும்..??(சத்யஜித்ரே,வட பழனி)

அவர் வீட்ல HBO சேனல் ரெண்டு மாதமாய் வரவில்லையாம்.அதனால் படம் தள்ளிபோகும் என்று தெரிகிறது.


8)நான் குமாரை காதலிக்கிறேன்.குமாரோ மீனாவை காதலிக்கிறான்.மீனா பாபுவை காதலிக்கிறாள்.பாபு நேத்து எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான். நாங்கள் இப்போ என்ன செய்ய வேண்டும்.(ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி)

ம் ...நீங்க மருந்த குடிச்சி சாக வேண்டும்...


9) நான் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் ...அதற்கு என்ன செய்ய வேண்டும்?? (முலாயம் சிங், மூணாறு)

இந்த மாதிரி வெட்டித்தனமா கேள்வி எழுதிப்போடுவதை விட்டுவிட்டு வேலை மயி&** ஒழுங்காய் பார்க்க வேண்டும்.


10)ஊழலை ஒழிக்க வேண்டும்னு நம்ம ஆ.ராசா சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்க போறாராமே அப்டியா???(2G.கோபாலன், பெரம்பலூர்)

பிளாஸ்டிக்க ஒழிக்கணும்னு எங்கயாச்சும் பிராய்லர்கோழி போராட்டம் பண்ணி பாத்திருக்கீங்களா???

---தொடரும்



.

கருத்துகள்

ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
கலைஞரும் கேள்விபதில் எழுதுறாரு..நீங்களும் கேள்வி பதில் எழுதுறீங்க...உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்யாசம்??? (ஜெயா,ஸ்ரீரங்கம்)
60வயது ...மூன்று மனைவிகள்...

சூப்பரு பதில்.. மனைவிகள் பத்தி நமக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்..
murukesan இவ்வாறு கூறியுள்ளார்…
super sir
Madhavan Srinivasagopalan இவ்வாறு கூறியுள்ளார்…
ரசித்தேன் ..
முரளிகண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
செம நக்கல்
vasan இவ்வாறு கூறியுள்ளார்…
ப‌திலுக்காக, கேள்வியைத் தாயாரிக்கிற‌ திற‌மை, கல்க‌ண்டு த‌மிழ்வாணன், குமுத‌ம் அர‌சுக்கு அடுத்து இவ‌ன் சிவ‌ன் நீங்க‌தான். ரசிக்கும்ப‌டியான கேள்வி ப‌தில்க‌ள்.
vasan இவ்வாறு கூறியுள்ளார்…
ப‌திலுக்காக, கேள்வியைத் தாயாரிக்கிற‌ திற‌மை, கல்க‌ண்டு த‌மிழ்வாணன், குமுத‌ம் அர‌சுக்கு அடுத்து இவ‌ன் சிவ‌ன் நீங்க‌தான். ரசிக்கும்ப‌டியான கேள்வி ப‌தில்க‌ள்.
மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா இருந்துதுங்க... ரசிச்சு சிரிச்சேன்!
Janakiraman இவ்வாறு கூறியுள்ளார்…
சிவா இந்த விமர்சனம் பண்ணுற வேலை, கேள்வி பதில் எழுததுறகிறது இதல்லாம் உண்ணாக்கு நீயே பண்ணிக்கிறது எவ்வளவு காஸ்டமுன்னு எனக்கு புரியுதுடா... *(இத கூட ஒரு நீ எழுதணும்)
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அருண் ,முருகேசன் ,மாதவன்.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி முரளிகண்ணன் ...

வாசன் சார் ...நானே வேற பேர்ல கமெண்ட் போட்டிருக்கேன்னு நெனச்சுக்க போறாங்க :) ...அன்புக்கு நன்றி...
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி மூன்றாம் கோணம் ..

நன்றி ஜானகி
angel இவ்வாறு கூறியுள்ளார்…
இத மெனக்கெட்டு கேள்வின்னு கேட்ருக்க பாரு நீ தாண்டா செல்லம் அழகு....

ithuku pathil solra nan than alagunu solama vitinga
SATHISH இவ்வாறு கூறியுள்ளார்…
சிவா, உங்களின் சிறப்பே உங்களின் நக்கல் தான். நக்கலக்குங்க. நக்கலோட கலக்குங்கன்னு கொஞ்சம் வித்தியாசமா சொல்ல வந்தேன்.